கனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..! யாழ்.சாவகச்சோி- மீசாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்கவந்தவா் விபத்தில் உயிாிழந்த சோகம்..! யாழ்.சாவகச்சோி- மீசாலையில் சம்பவம்..

யாழ்.சாவகச்சோி- மீசாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த கனடாவிலிருந்து உறவினா்களை பாா்க்க யாழ்ப்பாணம் வந்த முதியவா் உயிாிழந்துள்ளாா். 

 மீசாலை பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 

சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் அவர் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று(9) இரவு உயிரிழந்தார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை வடக்கு பகுதியினை சேர்ந்த சின்னத்தம்பி சுந்தரலிங்கம் (வயது-83) என்பவரே உயிரிழந்தவராவார் என்று பொலிஸார் கூறினர். முதியவரின் பிள்ளைகள் அமெரிக்கா நாட்டில் வசித்து வருகின்றனர். 

இவர் கடந்த மாதம் 2ஆம் திகதி உறவினர்களை பார்ப்பதற்கு தாயகம் வந்துள்ளார்.நேற்றுமுன்தினம்(8) மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு 

துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். வீதியின் வலது பக்கம் திரும்ப முற்பட்ட போது பின் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முதியவரை மோதி தள்ளியுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 

மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.இறப்பு விசாரணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 

இன்று மதியம் இடம்பெற்றது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணயை முன்னெடுத்தார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு