தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல்களில் கலந்து கொள்ளவந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதா..?

ஆசிரியர் - Editor I
தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தல்களில் கலந்து கொள்ளவந்த தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதா..?

தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் களஞ்சியம் மீது திருகோணமலை விமானப்படை முகாமில் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் புகைப்படங்களுடன் வெளியாகிவருகிறது. 

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த இயக்குனர் களஞ்சிய ம் யாழ்.பல்கலைகழகத்தில் இடம்பெற்ற மாவீரர்களுக்கான நினைவேந்தல் மற்றும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் 

ஆகியவற்றில் பங்கு பற்றியதுடன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கேனஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதன் பின்னர் பலாலி விமான நிலையம் ஊடாக

கொழும்புக்கு பயணித்ததாகவும், அந்த விமானம் திருகோணமலை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டு அங்கு விமானப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடாத்தியதாகவும், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் 

பிரபாகரன் குறித்தும் கேட்டதாகவும், தாக்கியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றது. ஆனாலும் இலங்கை அரசு இது குறித்து இதுவரையில் எதுவும் கூறவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு