பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞன். பூநகரியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்..! சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞன். பூநகரியில் சம்பவம்..

கிளிநொச்சி- பூநகரி பகுதியில் கடலாமை இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த ஒரு வரை பொலிஸார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். 

இலங்கை கடல் ஆமைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளது. 

கடற் தொழிலில் ஈடுபட்டபோது மீனவரின் வலையில் சிக்கிய குறித்த கடலாமையை கடற்கரையில் இறைச்சிக்காக தயார் படுத்திக்கொண்டிருந்த நிலையில் 

பொலிசார் சந்தேக நபரை கைது செய்யதுடன், இறைச்சியையும் மீட்டுள்ளனர். சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இடம்பெற்றள்ளது. பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பூநகரி பொலிசார் இறைச்சியை மீட்டதுடன், 

சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிசார் சம்பவம் தொடர்பில் 

நாளை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு