தமிழர்களை மறந்து பௌத்த மதவாதத்தை நம்பும் சஜித்..! நாட்டிலுள்ள சகல விகாரைகளுக்கும் போகிறாராம்..

ஆசிரியர் - Editor I
தமிழர்களை மறந்து பௌத்த மதவாதத்தை நம்பும் சஜித்..! நாட்டிலுள்ள சகல விகாரைகளுக்கும் போகிறாராம்..

இலங்கையில் உள்ள சகல விகாரைகளுக்கும் நாளை தொடக்கம் தொடர்ச்சியான விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கியதேசிய கட்சியின் பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜி த் பிறேமதாஸ புதிய பயணத்தை தொடங்கவுள்ளார். 

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளுக்கும் நாளை மறுதினம் முதல் விஜயம் செய்யவும் சஜித் பிரேமதாஸ தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து 

சஜித் பிரேமதாஸ அரசியலைத் தொடர்வதற்காக ஓய்வெடுத்திருந்தார் என்றும், பொதுத் தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில் தேர்தலுக்காக பலவித முடிவுகளை எடுத்திருப்பதால் மீண்டும் புதுவிதப் பயணமொன்றை ஆரம்பிக்கின்றார்.

என்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சஜித் அணி உறுப்பினர் ஒருவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு