தமிழா்கள் வாக்களிக்ககூடாது..! காலி- நாகொட பகுதியில் காடையா்கள் அடாவடி..

ஆசிரியர் - Editor I
தமிழா்கள் வாக்களிக்ககூடாது..! காலி- நாகொட பகுதியில் காடையா்கள் அடாவடி..

காலி மாவட்டம் நாகொட பகுதியில் தோட்ட தொழிலாளா்களான தமிழா்கள் வாக்களி க்ககூடாது. என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. 

நாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார். 'உங்கள் நல்லது கெட்டது என அனைத்துக்கும் வருபவன் நானே, நீங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும்' என குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது 

குறித்தான சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இது தொடர்பில் தற்போது வரை எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு