மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிகளுடன் நடமாடியவர்கள் கைது..! 12 துப்பாக்கிகள் பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிகளுடன் நடமாடியவர்கள் கைது..! 12 துப்பாக்கிகள் பறிமுதல்..

மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிகளுடன் நடமாடிய 5 பேரை பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளதுடன், துப்பாக்கிகள், வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குழப்பம் ஏற்படும் வகையில் நடந்து கொண்ட ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் ரம்புக்கன, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு 

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்களிடம் இருந்து 12 துப்பாக்கிகள், வாள் மற்றும் கத்தி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 

கடிகமுவ, யட்டிவெல்தெனிய மற்றும் வஹவ ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை மாவனெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு