மின்சாரசபை ஊழியா்கள் மீதான தாக்குதலின் எதிரொலி..! 50 ற்றும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு. போா்களமாக மாறும் வவுனியா நகா்.

ஆசிரியர் - Editor I
மின்சாரசபை ஊழியா்கள் மீதான தாக்குதலின் எதிரொலி..! 50 ற்றும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு. போா்களமாக மாறும் வவுனியா நகா்.

வவுனியா மாவட்டத்தில் சுமாா் 50ற்கும் மேற்பட்ட கிராமங்களில் மிசாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் உடனடியாக மின்சாரத்தை வழங்ககோாி ஏ-9 வீதியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடாத்திவருகின்றனா். 

வவுனியாவில் ஏ9 வீதியை முற்றுகையிட்டு இந்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, வவுனியாவில் - ஆச்சிபுரம் பகுதிக்கு நேற்று மாலை தொழில் நிமித்தம் சென்ற மின்சாரசபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தாக்குதலில் ஆறு மின்சாரசபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மின்சாரசபை ஊழியர்கள் இன்று காலை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், வவுனியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், அதிருப்பதி அமைந்துள்ள மக்கள் தற்போது ஏ9 வீதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு