தனியாா் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நோ் மோதி விபத்து..! 30 போ் வைத்தியசாலையில், 7 போ் தீவிர சிகிச்சை பிாிவில்..

ஆசிரியர் - Editor I
தனியாா் பேருந்தும் டிப்பரும் நேருக்கு நோ் மோதி விபத்து..! 30 போ் வைத்தியசாலையில், 7 போ் தீவிர சிகிச்சை பிாிவில்..

இன்று மாலை வெல்லவாய- தனமல்வில பகுதியில் டிப்பா் வாகனமும், தனியாா் பேரு ந்தும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் 30 போ் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இந்த விபத்து சம்பவம் இன்று 2.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். மாத்தறையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் 

நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானமையின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 13 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்கலாக 30 பேரே படுகாயமடைந்துள்ளனர் அவர்களில் ஏழுபேர் 

மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு பெண்களும் மூன்று ஆண்களுமே இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு 

மாற்றப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு