வெற்றுக் காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்..!

ஆசிரியர் - Editor I
வெற்றுக் காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண்..!

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றில் வயோதிப பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

வவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வயோதிபப் பெண் இறந்த நிலையில் 

இன்று காலை மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு இறந்தவர் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள 

ஊத்துமடு கிராமத்தைச்சேர்ந்த 80 வயதுடைய பூமணி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு குற்றவியல் பொலிஸாருடன் இணைந்து 

விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு