நீராவியடி பிள்ளையார் ஆலய குழப்பங்களின் பின்னணியில் கிறிஸ்த்தவ அடிப்படைவாத அமைப்பாம்..! உளறும் ஞானசார தேரர்.

ஆசிரியர் - Editor I
நீராவியடி பிள்ளையார் ஆலய குழப்பங்களின் பின்னணியில் கிறிஸ்த்தவ அடிப்படைவாத அமைப்பாம்..! உளறும் ஞானசார தேரர்.

முல்லைத்தீவு- நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் உண்டான குழப்பங்கள் மற்றும் இந் து- பௌத்த சமயங்களுக்கிடையிலான முறுகல் நிலைகளுக்கு பின்னணியில் கிறிஸ்த்தவ அடிப்படைவாத அமைப்பே உள்ளது. 

மேற்கண்டவாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நேற்று இடம்­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஜனா­தி­பதித் தேர்தல் இடம்பெற­வுள்ள தரு­ணத்தில் தேர்தல் பிர­சார மேடை­களில் மத­கு­ரு­மார்கள் ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் குறிப்­பாக பௌத்த பிக்­குகள் சிலர் கருத்­து­களைத் தெரி­விப்­பது பௌத்­த­ மத கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணா­ன­தாக காணப்­ ப­டு­கின்­றன. அர­சியல் தேவை­க­ளுக்கு மாத்­திரம் மதக் ­க­ருத்­துகள் தற்­போது பாவ­ னைக்கு எடுத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றமை வருந்­தத்­தக்­கது.

நாட்டில் அடிப்­ப­டை­வாதம் தோற்றம் பெற்­றுள்­ளது என்றும் அதற்கு அர­சி­யல்­வா­தி­ களின் ஆத­ரவு காணப்­ப­டு­கின்­றது என்றும் பல முறை எடுத்­து­ரைத்தும் நாங்கள் இன­ வா­தி­க­ளா­கவும் மத­வா­தி­யா­க­வும் விமர்­சிக்­கப்­பட்டோம். 

பௌத்த மதத்­துக்கு எதி­ராக திட்­ட­மி­டப்­பட்ட வகையில் மேற்­கொண்டு வரும் சதிகள் இடம்பெற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாக தீர்வு நிலை­யை அ­டையும் என்று ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது. நாட்டில் 7000 பௌத்த விகா­ரைகள் காணப்ப­டு­கின்­றன. 

அனைத்து பௌத்த துற­விகளும் எந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் அர­சியல் கருத்­து­க­ளுக்கும் அடி­ப­ணி­யாமல் பௌத்த மதக் கோட்­பா­டு­க­ளுக்கு செவி­ சாய்த்து அர­சியல் ரீதியில் ஒரு தீர்­மா­னத்­தை முன்­னெ­டுத்தால் 

பௌத்த மதத்­தை எவ்­வித ஆக்­கி­ர­மிப்­பு­களும் இன்றி பாது­காக்­க லாம்.பல்­லின மக்கள் வாழும் சமூ­கத்தில் அனை­வ­ரது மதச் சுதந்­தி­ரமும் பாது­காக்­கப்­பட வேண்டும். இஸ்லாம், கிறிஸ்­தவம் மற்றும் இந்து ஆகிய மதங்­களைச் சேர்ந்­த­வர்கள் 

தங்­களின் மதக் கொள்­கை­களை முறை­யாக முன்­னெ­டுத்துச் செல்­கின்­றார்கள். ஆனால் பௌத்­த­மதக் கொள்­கைகள் ஆரோக்­கி­ய­மான முறையில் போஷிக்­கப்­ப­ட­ வில்லை.பௌத்­த­மதம் எந்­த­ள­விற்கு இன்று சவால்­களை எதிர்கொண்­டுள்­ளது. 

என்­பது முல்­லைத்­தீவு நீரா­வி­யடி விவ­கா­ரத்தின் ஊடாக வெளிப்­பட்­டுள்­ளது. 2007ஆம் ஆண்டு நீரா­வி­யடி பிர­தேசத் தில் 93 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் ஒரு சிறிய பௌத்த விகாரை அமைக்­கப்பட்டுள்­ளது. 

அந்த வளவில் இருந்த ஒரு பிள்­ளையார் சிலையை விகா­ரா­தி­ பதி விகா­ரைக்குள் வைத்­துள்ளார். காலப்­போக்கில் இந்தப் பிள்­ளையார் சிலை விடயத்தில் வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கடும்­ போக்­குடன் செயற்பட்டார். 

நீரா­வி­யடி பிள்­ளையார் வளா­கத்தில் பௌத்த பிக்­ குவின் உடல் தகனம் செய்­யப்­பட்­ட­மை­யைத் தொடர்ந்து இந்து– பௌத்த மதங்­க­ளுக்­ கி­டையில் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதமே செல்வாக்கு செலுத்தியது. 

ஏப்ரல் 21 தின குண்டுத் தாக்குதலுக்குப் பின் இந்துக்களும் பௌத்தர்களும் ஒற்றுமையாகச் செயற்பட்ட மைக்கு எதிராகவே கிறிஸ்தவ அடிப்படை வாதம் அரசியல் அடிப்படைவாதிகளுடன் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு