ஜனாதிபதி தேர்தல் களத்தில் 13 டம்மி வேட்பாளர்கள்..! கண்டு பிடித்துவிட்டோம் என்கிறார் தேர்தல் ஆணையாளர்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தேர்தல் களத்தில் 13 டம்மி வேட்பாளர்கள்..! கண்டு பிடித்துவிட்டோம் என்கிறார் தேர்தல் ஆணையாளர்..

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 13 டம்மி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். 

குறித்த டம்மி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய வேட்பாளருக்கு ஆதரவாகவும் போட்டியில் இறங்கியுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது. இவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முக்கிய வேட்பாளர்களின் மேடைகளில் காணப்பட்டனர்.தவிர இந்த வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் 

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இரண்டு முக்கிய போட்டியாளர்களுக்கு ஆதரவான தேர்தல் பேரணிகளில் உரையாற்றியுள்ளனர்.இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிச்சுமை தேவையின்றி அதிகரித்துள்ளது. வாக்குச்சீட்டு மிகவும் நீளமானதாக உள்ளது. மேலதிகமான வாக்குப் பெட்டிகளை பெற வேண்டியுள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு