அலாி மாளிகையில் சந்திப்பு..! சித்தா், செல்வம் பிரதமருடன் நீண்டநேரம் பேச்சு..

ஆசிரியர் - Editor I
அலாி மாளிகையில் சந்திப்பு..! சித்தா், செல்வம் பிரதமருடன் நீண்டநேரம் பேச்சு..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவாா்த்தை நடாத்தியுள்ளன. 

இந்த பேச்சுவாா்த்தை இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு 

ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான கலந்துரையாடல்களே இதன்போது இடம்பெற்றன. தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் 

அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் 

ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.தமிழரசு கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்

 கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் ஆதரவின் முக்கியத்துவம் குறித்து தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

தமது கட்சிகளின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன 

மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு