முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..! துப்பாக்கிகள், கைகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..! துப்பாக்கிகள், கைகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் மீட்பு..

உள்நாட்டில் தயாாிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைகுண்டுகள், தொலைதொடா்பு சாதனங்கள் உள்ளிட்ட பெருமளவு ஆயுதங்களுடன் பூண்டுலோயா பகுதியை சோ்ந்த ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த நபர் 6 வருடங்களுக்கு முன் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்க்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே 

இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறித்த நபரிடம் இருந்து டி-56 ரக துப்பாக்கிக்கு பயன்ப்படுத்தப்படும் 31 கைகுண்டுகளும் , உள்நாட்டில் உற்ப்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும், தொலைதொடர்பு சாதனங்களும்,

கேரள கஞ்சா 31 கிராமும் மீட்க்கப்பட்டதாக காவல் துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு