நள்ளிரவில் கஞ்சாவுடன் நடமாடிய பெண் கைது..! ஓமந்தையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
நள்ளிரவில் கஞ்சாவுடன் நடமாடிய பெண் கைது..! ஓமந்தையில் சம்பவம்..

ஓமந்தை பகுதியில் நேற்று இரவு கஞ்சாவுடன் நடமாடிய 40 வயதான குடும்ப பெண் ஒ ருவா் அரை கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

தாண்டிக்குளத்திலிருந்து, கள்ளிக்குளத்திலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் குறித்த பெண் பயணித்துள்ளார்.

இதன்போது நொச்சிமோட்டை பாலத்தடியில் கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணை சோதனையிட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தம் வசம் 500 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்துள்ளார்.

இதனையடுத்தே வவுனியா, கள்ளிக்குளத்தை சேர்ந்த 40 வயதுடைய அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின், 

சந்தேகநபரான பெண்ணை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு