வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் போராட்டம்..! சம்மந்தன், சுமந்திரன் இலக்கு..

ஆசிரியர் - Editor I
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் போராட்டம்..! சம்மந்தன், சுமந்திரன் இலக்கு..

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் காணாமல் ஆக் கப்பட்டவா்களின் உறவினா் போராட்டம் நாடாத்த முயற்சித்த நிலையில் வீதியில் நி ன்று உறவுகள் போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். 

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 985 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள் 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் 

என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்? சம்பந்தா தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்களை 

பிரதிநிதித்துவப் படுத்த தகுதியற்றவர்கள் சுமந்திரனே பாராளுமன்றத்தில் பௌத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்?சம்பந்தா இலங்கை ஒரு பௌத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் 

உங்களுக்கு அனுமதி தந்தார்களா? போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு