கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் கைது..!

ஆசிரியர் - Editor I
கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் கைது..!

திருகோணமலை கோட்டை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவா் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

இராணுவ வீரர் விடுமுறையில் சென்று கடமைக்காக திரும்பியபோது அவருடைய பையை இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் 

பரிசோதனை செய்துள்ளனர். இதன்போது அவரிடமிருந்து கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் அவர் திருகோணமலை தலைமையக 

பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தந்திரிமலை, பேமடுவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.சுகத் அரவிந்த வாசல (30 வயது) 

என்பவரே சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் திருகோணமலை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், 

இவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு