போதை மாத்திரைகளுடன் காம களியாட்டம்..! 17 பெண்கள் உட்பட 100 போ் கைது.

ஆசிரியர் - Editor I
போதை மாத்திரைகளுடன் காம களியாட்டம்..! 17 பெண்கள் உட்பட 100 போ் கைது.

கொழும்பு- தெஹிவளை பகுதியில் வீடொன்றில் அபாயகரமான போதை மாத்திரை கள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றுடன் களியாட்ட நிகழ்வு நடாத்திய 17 பெண்கள் உள்ளிட்ட 100 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட 

சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கேரள கஞ்சா மற்றும் இனங்காணப்படாத அபாயகரமான போதை குளிசைகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 17 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 17 முதல் 48 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை களுத்துறை, குருநாகல், மற்றும் பொலநறுவை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 

காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு