11போ் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்..! கடற்படை தளத்தில் விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
11போ் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்..! கடற்படை தளத்தில் விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதி..!

11 போ் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடா்பில் திருகோணமலை கடற்ப டை தளத்தில் விசாரணைகளை நடாத்த குற்ற விசாரணை பிாிவுக்கு நீதிமன்றம் அனு மதி வழங்கியிருக்கின்றது. 

2008, 2009 காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த அனுமதியை வழங்கியது.

11 பேரும், காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னர், தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை கடற்படை முகாமில், சட்ட மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், குற்ற விசாரணை அதிகாரிகள் என 

மூன்று குழுக்களை ஆய்வு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும் 10ஆம் நாளுக்குள் இந்த ஆய்வை நடத்தி, இந்தக் குழுக்கள் குற்ற விசாரணைப் பிரிவிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு