ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவேன்..! பதவியை துாக்கி எறிந்து சிவாஜி ஆவேசம்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவேன்..! பதவியை துாக்கி எறிந்து சிவாஜி ஆவேசம்..

ஜனாதிபதி வேட்பாளா் எம்.கே.சிவாஜிலிங்கம் ரெலோவின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக கட்சிக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியிருக்கின்றாா். 

சிவாஜிலிங்கம் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி  அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது வருகின்றது.

இதனையடுத்து தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கமைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகுவதாக கட்சியின் செயலாளர் நாயகமான 

சட்டத்தரணி என். சிறிகாந்தாவிடம் கடிதமொன்றையும் இன்று காலை நேரடியாக கையளித்துள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு