நல்லை கந்தன் ஆலயத்தில் சூர சங்கார திருவிழா..! பக்தா்கள் சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது..

ஆசிரியர் - Editor I
நல்லை கந்தன் ஆலயத்தில் சூர சங்கார திருவிழா..! பக்தா்கள் சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது..

கந்தசஷ்டி தினத்தின் இறுதி நாளான இன்று நல்லுாா் கந்தன் ஆலதய்தில் சூர சங்கார நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது. 

இன்று பிற்பகல் 4.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆறுமுகசுவாமி வெள்ளித் ஆட்டுக்கடா வாகனத்தில் ஏறி 

சங்காரத்திற்குப் புறப்பட்டார்.நல்லூரில் வாழும் செங்குந்த மரபினர் முருகப் பெருமானுடைய நவ வீரர்களாகத் தம்மை அலங்கரித்து 

போர்க்களத்தில் பங்கேற்றனர்.ஆலய முகப்பு வாயிலில் தாரகன் போரும் தெற்கு வீதியில் இருந்து மேற்கு வீதி வரை சிங்கமுகாசுரன் போரும் 

வடக்கு வீதியில் சூரன் போரும் இடம்பெற்றன. ஆலயத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள மனோன்மணி அம்மன் வாயிலில் 

மாமரமாக வந்த சூரனை முருகனுடைய வேல் பிளப்பதாகப் பாவனை செய்யப்பட்டது. சூரன் மயிலாகவும் சேவலாகவும் மாறி நல்லறிவு பெற்றான். 

மயிலை வாகனமாக்கியும் சேவலைக் கொடியாக்கியும் முருகப் பெருமான நல்லருள் புரிந்தார்.தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் 

உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் என்ற கந்தபுராண வாக்கை நினைத்து அனைவரும் வழிபட்டனர்.

படங்கள்- நன்றி. ஐ.சிவசாந்தன்..


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு