யாழ்.மாநகர முதல்வா் அதிரடி உத்தரவு..! உணவகங்கள் மீது பாயும் சட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வா் அதிரடி உத்தரவு..! உணவகங்கள் மீது பாயும் சட்டம்..

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் உள்ள உணவகங்களில் பொலித்தீன் தாள்களை பய ன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தும் உணவகங்கள் மீது சட்டநட வடிக்கை எடுக்குமாறு யாழ்.மாநகர முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். 

மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் லஞ்ச்சீற் பாவிக்ககூடாது என பொது அறிவித்தல் வழங்கப்பட்டு அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டது. இருப்பினும் லஞ்ச்சீற்பாவனை தொடர்வதனால் 

அதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இதனால் உடனடியாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே உடனடியாக 

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டு லஞ்ச்சீற் பாவனையினை மேற்கொள்ளும் உணவங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு நீதிமன்றில் 

முற்படுத்துமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தற்போது உணவங்களில் லஞ்ச்சீற் பாவனை தடுக்கப்பட்டுள்ள அதேநேரம் யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள சகல வர்தக நிலையங்களும் இந்த ஆண்டின் நிறைவின் 

பின்னர் தமது லஞ்ச்சீற் விற்பனையினையும் முழுமையாக நிறுத்துவதே உசிதமானது. அதே போன்று மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருமண மண்டபங்களும் தமது உணவு விநியோகங்களின்போது 

லஞ்ச்சீற் பாவனையை முழுமையாக நிறுத்த வேண்டும். அவ்வாறு தொடர்ந்தும் திருமண மண்டபங்களிற்கும் இதே சட்ட நடவடிக்கை பொருந்தும் என அறிவுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு