4 போ் கொண்ட குடும்பத்தின் வீடு தீக்கிரை..! ஏதிலிகளாக நிற்கும் சோகம்..

ஆசிரியர் - Editor I
4 போ் கொண்ட குடும்பத்தின் வீடு தீக்கிரை..! ஏதிலிகளாக நிற்கும் சோகம்..

வவுனியா- ஈச்சங்குளம் பகுதியில் வீடொன்று திடீரென தீப்பற்றி எாிந்து நாசமாகியிருக்கின்றது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் 

தற்காலிக வீடு ஒன்றே தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில், 

வீட்டில் உள்ளவர்கள் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தீயை கட்டுப்படுத்த அயலவர்கள், கிராம மக்கள் முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. வீட்டில் இருந்த உடமைகள், 

பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.குறித்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் 

ஈச்சங்குளம் பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு