கோட்டாவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாா் பிரச்சாரமா..? தெளிவுபடுத்திய பொலிஸ் தலமையகம்.

ஆசிரியர் - Editor I
கோட்டாவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பொலிஸாா் பிரச்சாரமா..? தெளிவுபடுத்திய பொலிஸ் தலமையகம்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாவுக்கு ஆதரவான தோ்தல் பிரச்சார நடவடிக்கைகளில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி மற்றும் ஒரு உயா் பொலிஸ் அதிகாாி ஈடுபட்டனா்.

என சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் செய்திகளில் உண்மையில்லை. என பொலிஸ் தலமையகம் தொிவித்திருக்கின்றது. செய்தி தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெளிவுபடுத்துகையில், 

யாழ் - கோட்டை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அந்த பிரதேசத்திற்கான வீதி பாதுகாப்பு, உயர்ந்த கட்டட பாதுகாப்பு 

மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் என்பவற்றுக்காக இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். யாழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் டீ.டி.ஆர்.தசநாயக்க மற்றும் யாழ்.பொலிஸ் தலைமையக பொலிஸ் 

பரிசோதகர் பிரஷாந் பெர்னான்டோ ஆகியோரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பிரசாரக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறித்த வேட்பாளர் இந்த பொலிஸ் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது, 

அதனை கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக வருகை தந்திருந்த நபர் புகைப்படம் எடுத்து ' பொலிஸ் அதிகாரிகள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் ' என்று பொய்யான செய்தியை பரப்பியிருக்கிறார். 

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு பரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு