கவனம் வாக்காளர்களே..! 3 ஆண்டுகள் சிறை..

ஆசிரியர் - Editor I
கவனம் வாக்காளர்களே..! 3 ஆண்டுகள் சிறை..

வாக்களிப்பின் பின்னர் சமூக வலைத்தளங்களில் வாக்களிப்பு தொடர்பான விபரங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது குற்றம் எனவும், அதற்காக சிறைத்தண்டணை வழங்க ப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நாடு முழுவதிலும் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இன்றும் நாளையம் நாடு முழுவதும் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில் வாக்களித்த பின் அது குறித்த விபரங்களையோ அல்லது புகைப்படங்களையோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படவுள்ளது.

எனவே குறித்த விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு