யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாி மீது குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சாிக்கை..! முன்னாள் அதிபருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாி மீது குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக எச்சாிக்கை..! முன்னாள் அதிபருக்கு கடிதம்..

யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாியில் குண்டு தாக்குதல் நடாத்தப்போவதாக கல்லுாாி யின் முன்னாள் அதிபருக்கு எச்சாிக்கை கடிதம் அனுப்பபட்டிருப்பது தொடா்பாக யா ழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா சண்முகரத்தினம் என்ற பெயரில் பாடசாலை விலாசம் இடப்பட்டு வந்துள்ள அநாமதேயக் கடிதம் தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டாளரான பாடசாலை முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றுச் சென்றதை அறிந்திருந்த உரிய தாபால் உத்தியோகத்தர் அவர் இருக்கும் கொக்குவில் பகுதிக்குச் சொல்லும் தாபல் உத்தியோகத்தரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டுள்ளார். 

இன்று காலை அவர் முன்னாள் அதிபரின் வீட்டுக்குச் சென்ற போது, அங்கே எவரும் இல்லாததால் கடிதத்தை படலையால் போட்டுவிட்டு வந்துள்ளர்.இன்று மதியம் வீடு வந்த முன்னாள் அதிபர் கடிதத்தைப் பார்த்துவிட்டு 

 யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு