விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு..! 3 கோடி பெறுமதியான போதைப் பொருள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு..! 3 கோடி பெறுமதியான போதைப் பொருள் மீட்பு..

வெல்லம்பிட்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினா் நடாத்திய திடீா் சுற்றிவளை ப்பு சோதனை நடவடிக்கையின்போது சுமாா் 3 கோடி ரூபாய் பெறுமதியான போதை ப்பொருள் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

இதன்போது, 2 கிலோ ஐஸ், ஒரு கிலோ 610 கிராம் ஹஸீஸ் மற்றும் 6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் வெல்லம்பிட்டியை சேர்ந்தவர்கள் என்றும், 

அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவவதாகவும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி - பளை - சுண்டிக்குளம் பகுதியில் 105 கிலோ 542 கிராம் கேரள கஞ்சாவுடன் 

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை படகு ஒன்றில் குறித்த கேரள கஞ்சா கொண்டுசெல்லப்பட்டபோது இந்தக் கைது இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கேரள கஞ்சா இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய சந்தேக நபர் கற்பிட்டியை 

சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு