ரயில் மோதியதில் 4 மாடுகள் பலி..! மன்னாா்- கொழும்பு இடையில் இன்று காலை சம்பவம்.

ஆசிரியர் - Editor I
ரயில் மோதியதில் 4 மாடுகள் பலி..! மன்னாா்- கொழும்பு இடையில் இன்று காலை சம்பவம்.

தலை மன்னாாிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதில் 4 மாடுகள் உயிாிழந்துள்ளன. 

குறித்த சம்பவம் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று புதன்கிழமை (30) காலை 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் குறித்த ரயில் பயணித்துள்ளது.

இதன் போதே மன்னார்-மதவாச்சி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தை தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு 

பின் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கிசென்றது.தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் 

தொடர்ச்சியாக மாடுகள் மோதி உயிரிழக்கும் சம்பவம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு