முல்லைத்தீவில் பாடசாலைக்குள் நுழைந்த 6.5 அடி நீளமான முதலையால் பரபரப்பு..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் பாடசாலைக்குள் நுழைந்த 6.5 அடி நீளமான முதலையால் பரபரப்பு..!

முல்லைத்தீவு- செம்மலை பாடசாலையின் வகுப்பறைக்குள் நுழைந்த மிகப்பொிய முதலையினால் பாடசாலை அல்லோலகல்லோலமானது. 

மாணவர்கள் பாடசாலைக்குள் பிரவேசித்தபோது வகுப்பறை கட்டிடம் ஒன்றிற்குள் முதலை இருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலையினை மீட்டுகொண்டுசென்றுள்ளார்.

6.5 அடி நீளம் கொண்ட குறித்த முதலையினை முல்லைத்தீமாவட்டத்தில் உள்ள முதலைகள் சரணலாயத்தில் விடகொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு