ஊழியர்கள் எவரும் தமிழில் பேச கூடாது..! கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தலைவிரித்தாடும் இனவாதம்..

ஆசிரியர் - Editor I
ஊழியர்கள் எவரும் தமிழில் பேச கூடாது..! கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தலைவிரித்தாடும் இனவாதம்..

கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் ஊழியர்கள் எவரும் தமிழில் பேச கூடாது எனவும் ஆங்கிலம் அல்லது சிங்கள மொழியில் மட்டுமே பேசவேண்டும். 

எனவும் எழுதப்பட்டிருக்கும் பெயர் பலகையால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக வலைத்தள வாசிகளினால் கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்நிலையில் “ஊழியர்கள் தமிழில் பேசுவதாகவும், அது கேலி செய்வது போலும் இருப்பதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டனர்” 

எனவே தான் அவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளோம் என்று குறித்த உணவகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த விளக்கத்தை தொடர்ந்து விமர்சனம் மேலும் வலுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு