தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவா் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..!

ஆசிரியர் - Editor I
தீபாவளிக்கு பட்டாசு வெடித்தவா் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு..!

மஸ்கெலியா- கவறவில பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பட்டாசு வெடித் ததில் படுகாயமடைந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். 

நேற்றிரவு 10.30 அளவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின் போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பட்டாசை கொளுத்திய சந்தர்ப்பத்தில் குறித்த நபர் காயமடைந்ததுடன், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.ஸ்ட்ரெஸ்பி தோட்டத்தை சேர்ந்த 40 வயதான ஒருவரே பட்டாசு வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு