13 கோாிக்கைகள் நிராகாிப்பு..! அவசரமாக கூடியது 5 கட்சிகளின் கூட்டம்..

ஆசிரியர் - Editor I
13 கோாிக்கைகள் நிராகாிப்பு..! அவசரமாக கூடியது 5 கட்சிகளின் கூட்டம்..

ஜனாதிபதி தோ்தலில் பொது நிலைப்பாடு ஒன்றை எடுப்பதக்காக ஒன்றிணைந்திருக் கும் 5 கட்சிகள் நிலைப்பாடு ஒன்றை எடுப்பதற்காக இன்று காலை கூடியிருக்கிறது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் வடக்கில் உள்ள தமிழ்த் தேசிய கட்சிகள் இனைந்து ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது, 

முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் போன்றன உருவாக்கப்பட்டது. தென்னிலங்கை யில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 

பிரதான கட்சிகளின் வேட்பாளர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.எனினும் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளும் பிரதான வேட்பாளர்களினால் 

நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன செய்வது என்று ஆராயவே பல்கலைக்கழக மாணவர்கள் தலமையில் 5 தமிழ்தேசியக் கட்சிகள் 

ஒன்று கூடியுள்ளனர்.அந்த வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான மாவை சேனாதிராஜா, 

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,

பாராளுமன்ற உருப்பினர் சிவசக்தி ஆனந்தன், புளொட் சார்பாக அதன் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமான த.சித்தார்தன்,

ரெலோ சார்பாக முன்னாள் மாகாண சபை உருப்பினர் ச.குகதாஸ்,மூத்த உருப்பினர் கென்ரி மகேந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக 

அதன் ஊடக பேச்சாளர் த.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு