கோட்டாவுக்கு பதிலிருக்கிறது..! நேரம் வரட்டும்..

ஆசிரியர் - Editor I
கோட்டாவுக்கு பதிலிருக்கிறது..! நேரம் வரட்டும்..

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாயவின் தோ்தல் வி ஞ்ஞாபனம் தொடா்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். அது தொடா்பாக எமது நிலைப்பாட்டை அறிக்கையாக சமா்பிக்கவுள்ளோம். 

என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.கோத்­த­ பாய ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­ பாட்டை வின­வி­ய­போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

கடந்த வௌ்ளிக்­கி­ழமை தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவை அமைத்து புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார். 

அத்­துடன் நாட்டின் ஒற்­றை­யாட்சி முறை மற்றும் பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை என்­பன தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை, 

மத சுதந்­திரம் அடிப்­படை மனித உரிமை ஆகி­யவை அர­சி­ய­ல­மைப்பின் முக்­கிய பகு­ தி­க­ளாக இருக்கும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை, கலப்பு தேர்தல் முறை, மாகா­ண­சபை முறைமை மற்றும் சட்­டத்தின் ஆட்­சிப்­ப­டுத்தல் 

என்­பன தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­படும் என்று கோத்­த­பா­யவின் தேர்தல் விஞ்­ ஞா­ப­னத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.இந்­நி­லையில் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கேச­ரிக்கு 

குறிப்­பி­டு­கையில்,சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­ த­பாய ராஜ­ப­க்ஷவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நாங்கள் ஆராய்ந்­தி­ருக்­கின்றோம். அது தொடர்­பான எமது நிலைப்­பாட்டை உள்­ள­டக்­கிய 

விரி­வான அறிக்­கையை விரைவில் வெ ளியி­டுவோம். அதில் அனைத்து விட­யங்­க­ ளுக்கு பதில்கள் இருக்கும் என்றார். பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­ னத்தில் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த விடயங்கள் 

எவ்வாறு உள்ளன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன் அனைத்து விடயங்கள் குறித்தும் எமது அறிக்கையில் தெளிவாக பதிலளிப்போம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு