யாழ்.சுன்னாகம் பகுதியில் ரவுடி கும்பலின் கத்திக் குத்துக்கு இலக்கான இரு இளைஞா்கள் படுகாயம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பகுதியில் ரவுடி கும்பலின் கத்திக் குத்துக்கு இலக்கான இரு இளைஞா்கள் படுகாயம்..!

யாழ்.சுன்னாகம் பகுதியில் ரவுடி கும்பலின் கத்திக் குத்துக்கு இலக்கான இருவா் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் நேற்றையதினம் இரவு (26) உரையாடிக்கொண்டு நின்றுள்ளனர். இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி கும்பல் ஒன்று 

அங்கு நின்றவர்கள் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.இதனால் இருவர் வயிற்றிலும் முதுகிலும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு