கிளிநொச்சியில் பதற்றம்..! வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் பதற்றம்..! வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார் தப்பி ஓட்டம்..

கிளிநொச்சி பகுதியில் டிப்பர் வாகனம் மீது பொலி ஸார் துப்பாக்கி சூடு நடாத்திய நிலையில் துப்பாக் கி சூடு நடாத்திய பொலிஸார் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்து வீதிக்கு செலுத்திய டிப்பர் வாகனத்தின் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக 

குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். டிப்பர் வாகனத்தின் பின் சில்லில் துப்பாக்கி சன்னம் பாய்நதுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் சம்பவத்தில் டிப்பர் வாகனம் சேதமாகியுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிசார் சம்பவ இடத்தில் பொலிசார் நிக்காது தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 அவசர பொலிஸாருக்கு அழைத்து 

முறைப்பாடு செய்தபோதிலும் உடன் விசாரணைகள் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு