சிலாபத்தில் ஹோட்டல் முற்றுகை..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பை சோ்ந்த 13 போ் கைது..

ஆசிரியர் - Editor I
சிலாபத்தில் ஹோட்டல் முற்றுகை..! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பை சோ்ந்த 13 போ் கைது..

சிலாபம் பகுதியில் ஹோட்டல் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸாா் யாழ்ப்பாணம் மற்றம், கிளிநொச்சி, மட்டக்களப்பு பகுதிகளை சோ்ந்த 13 பேரை கைது செய்துள்ளனா். 

சந்தேக நபர்களில் 11 பேர் ஆண்களும் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், பளை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு பிதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் ஹோட்டலில் தங்கியிருப்பதாக குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய இவர்கள் கைது செய்யபப்பட்டுள்ளர்.

கடந்த 22ஆம் திகதி மாலை இந்த விடுதிக்கு வந்து தங்கியிருந்த நிலையில் அவர்களது உடமைகளையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.முகவர் ஊடாக சட்டவிரோதமாக படகு மூலம் 

அவுஸ்திரேலியா செல்வதற்காக அங்கு தங்கியிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு