பணத்தை கொடுக்க மறுத்து முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்..! 3 ரவுடிகள் கைது. வவுனியாவில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
பணத்தை கொடுக்க மறுத்து முச்சக்கர வண்டி சாரதி மீது தாக்குதல்..! 3 ரவுடிகள் கைது. வவுனியாவில் பரபரப்பு..

வவுனியா நகாிலிருந்து முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமா்த்திய 3 போ் வேப்பங் குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை மூா்க்கத்தனமாக தாக்கியதுடன், முச்ச க்கர வண்டியையும் அடித்து சேதப்படுத்திய சம்பவம் இன்று காலை நடந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பின்னர் முச்சக்கரவண்டிக்கான வாடகை பணமான 250 ரூபாயை முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் கேட்டநிலையில் 

பணத்தை தர முடியாது என கூறி முச்சக்கர வண்டி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் முச்சக்கர வண்டியையும் சேதமாக்கியுள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற ஏனைய 

முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படும் இளைஞனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ,

கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். குறித்த நபர் கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி 

சாரதியான பா.சிறிதரன் 51 வயது என்ற குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு