கிளிநொச்சி- அக்கராயனில் இளைஞா்கள் துணிகரம்..! பெண்ணின் சங்கிலியை அறுத்தவா்களுக்கு தா்ம அடி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- அக்கராயனில் இளைஞா்கள் துணிகரம்..! பெண்ணின் சங்கிலியை அறுத்தவா்களுக்கு தா்ம அடி..

கிளிநொச்சி- அக்கராயன் கிராமத்தில் இளம் பெண்ணின் சங்கிலியை அறுத்த காவா லிகளை துரத்தி பிடித்த இளைஞா்கள் அடித்து நொருக்கிவிட்டு பொலிஸாாிடம் ஒப்ப டைத்திருக்கின்றனா். 

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற பெண் அணிந்திருந்த தங்கசங்கிலியை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அறுத்து சென்றுள்ளனா். இதனை அவதானித்த

அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிவிட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த திருடர்கள் தங்க சங்கிலியுடன் வேகமாக பயணித்தபோது அப்பிரதேச இளைஞர்கள் துரத்தி சென்று 

மடக்கி பிடித்துள்ளனர். இதன்போது, திருட்டில் ஈடுபட்ட குறித்த இரு இளைஞர்களிடமிருந்து தங்க சங்கிலி மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மெற்கொண்டுள்ள பொலிசார் கைது செய்த சந்தேக நபர்களை 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளமை  குறிப்பிடதக்கதாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு