சுதந்திரபுரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதா்களுடைய எலும்பு கூடுகள் நீதிபதி முன்னிலையில் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
சுதந்திரபுரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதா்களுடைய எலும்பு கூடுகள் நீதிபதி முன்னிலையில் மீட்பு..!

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் மதில் கட்டுவதற்கு தோண்டிய குழியிலிருந்து எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் முல்லைத்தீவு நீதிபதி முன்னிலையில் மனித எலும்பு எச்சங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

2 அல்லது அதற்கு மேற்பட்டோரின் மனித எச்சங்கள் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சட்ட மருத்துவ அதிகாரி இளங்கோவன், காணாமற்போனார் அலுவலக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் மீட்கப்பட்டன. 

புதுக்குடியிருப்பு சுந்திரபுரம் கொலனியில் நகுலேஸ்வரன் ராஜேஸ்வரி என்பவரின் தோட்டக்காணியிலேயே மனித எச்சங்கள் புதைக்கப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் திகதி வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில் 

முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார், சம்பவ இடத்துக்கு இன்று வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்தார். சட்ட மருத்துவ அதிகாரி இளங்கோவன், காணாமற்போனோர் அலுவலகத்தின் உறுப்பினர்கள் வேந்தன், 

பிரதீபா புண்ணியமூர்த்தி, மிராட் ஹக்கீம் உள்ளிட்டோரும் நீதிவானின் விசாரணைகளில் பங்கேற்றனர். மனித எச்சங்களை பொறுப்பேற்று ஆய்வுகள்  விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு 

சட்ட மருத்துவ அதிகாரிக்கு நீதிவான் அறிவுறுத்தல் வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு