யாழ்.காங்கேசன்துறையில் பாாிய கடத்தல் முயற்சியை முறியடித்து பொலிஸாா் அதிரடி..! கிளிநொச்சியை சோ்ந்தவா் கைது, ஒருவா் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் பாாிய கடத்தல் முயற்சியை முறியடித்து பொலிஸாா் அதிரடி..! கிளிநொச்சியை சோ்ந்தவா் கைது, ஒருவா் தப்பி ஓட்டம்..

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சொகுசு காா் ஒன்றில் கஞ்சா கடத்திய கும்பலை அதிரடியாக வழிமறித்த பொலிஸாா் ஒருவரை கைது செய்துள்ளதுடன், கஞ்சாவையும் மீட்டுள்ளனா். 

காங்கேசந்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சர் சேனாதிராவின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட குழுவாலேயே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. 

காரொன்றில் வைத்துக் கடத்தப்பட்ட கஞ்சாவே அவ்வாறு கைப்பற்றப்பட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொருவர் தப்பித்துத் தலைமறைவாகியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு