பொலனறுவையில் வேம்பு மரத்திலிருந்து வடியும் வேப்பம் கள்..! மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம்..

ஆசிரியர் - Editor I
பொலனறுவையில் வேம்பு மரத்திலிருந்து வடியும் வேப்பம் கள்..! மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம்..

பொலனறுவை பகுதியில் வீடொன்றில் உள்ள வேப்பு மரத்திலிருந்து கள் வடிந்து வரும் நிலையில் அதனை பாா்ப்பதற்கு தினமும் பெருமளவான மக்கள் கூடி வருகின்றனா். 

நாளாந்தம் மரத்தின் உச்சியில் இருந்து இடைவிடாமல் தினமும் பெருமளவு திரவம் வடிவதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்ட வீட்டு உரிமையாளர்,கடந்த சில தினங்களாக நீர்வீழ்ச்சி போன்று வேப்ப மரத்தில் இருந்து வடிவதனை பார்த்தோம். 

இதன் வாசனை கிராமம் முழுவதும் வீச ஆரம்பித்தது. இது தொடர்பில் ஆராய்ந்த போது அது தேனை விடவும் மிகவும் சுவையாக இருந்தது.

இதில் வந்த வாசனையே ஆராய்ந்து பார்ப்பதற்கான காரணமாக இருந்தது. தேன் போன்ற சுவையே அதில் உள்ளது. 

அவ்விடத்திற்கு தேனீக்கள் அதிகமாக வருவது வழக்கம்.எனினும் கசப்பான வேப்ப மரத்தில் இருந்து தேனை விடவும் சுவையான தேன் கிடைப்பது 

அதிசயமான விடயமாகும். இதனை அபூர்வ சம்பவமாகவே பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மரத்தை பார்வையிட கிராம மக்கள் நாளாந்தம் வந்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு