இரு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி விபத்து..! 60 போ் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
இரு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி விபத்து..! 60 போ் வைத்தியசாலையில்..

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும் கல்முனையி லிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியாா் பேருந்தும் நேருக்கு நோ் மோதி விபத் திற்குள்ளான நிலையில் 60 போ் படுகாயமடைந்துள்ளனா். 

மின்னேரியா பகுதியில் இன்று வியாழக்கிழமை  அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி 

பயணித்த அரச பேருந்தும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி பலியானதுடன் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

களத்திற்கு விரைந்த மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு