முல்லைத்தீவு- சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..! நாளை நீதிமன்றம் வழங்கவுள்ள முக்கிய கட்டளை..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள் மீட்பு..! நாளை நீதிமன்றம் வழங்கவுள்ள முக்கிய கட்டளை..

முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தை அகழ்வு செய்து ஆய்வு நடாத்துவதா? இல்லையா? என்பது தொடா்பில் நாளை முல்லை த்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவு வழங்கவுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னா் குறித்த நிலத்தை நில உரிமையாளர் தோண்டிக் கொண்டிருந்த போது எலும்பு துண்டுகள் மீட்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முல்லைதீவு காவல் துறையினர் 

நீதிமன்றத்திற்கு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, தீர்ப்பு வரும் வரை நிலத்தை பாதுகாக்குமாறு நீதிமன்றம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு