18 வயதான இளைஞன் அடித்துக் கொலை..! இதுவரை 10 போ் கைது. தீவிரமான விசாரணை தொடா்கிறது..

ஆசிரியர் - Editor I
18 வயதான இளைஞன் அடித்துக் கொலை..! இதுவரை 10 போ் கைது. தீவிரமான விசாரணை தொடா்கிறது..

கொழும்பு- மஹரகம பகுதியில் இன்று அதிகாலை 18 வயதான இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் இதுவரை 10 போ் சந்தேகத்தின் பெயாில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

குறித்த இளைஞன் மஹரகம பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்னால் வைத்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு கொலைசெய்யப்பட்ட இளைஞரின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் 

பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்களை மஹரகம பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு மேலதிக 

விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு