நிரந்தரமாக அதிபா் ஒருவரை நியமிக்ககோாி போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
நிரந்தரமாக அதிபா் ஒருவரை நியமிக்ககோாி போராட்டம்..!

முல்லைத்தீவு - முள்ளியவளை, வித்தியானந்த கல்லூரிக்கு அதிபர் நியமனம் செய்யுமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போரட்டம் ஒன்று 22.10.2019 இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விந்தியானந்த கல்லூரியில் அதிபராக கடமையாற்றியவர் ஓய்வுபெற்று சென்று, ஒருவருடம் கடந்த நிலையிலும் இதுவரை பாடசாலைக்கு அதிபர் நியமனம் செய்யப்படவில்லை.

இந் நிலையிலேயே பாடசாலையின் பழையமாணவர்கள், பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் பாடசாலையினுடைய நலன்விரும்பிகள் ஆகியோர் ஒன்றிணைந்து 

இம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தில் கல்வியமைச்சினைக் கோருகின்ற வகையில், உடனடியாக அதிபர் ஒருவரை பாடசாலைக்கு நியமிக்கவண்டும், 

ஒரு வருடகாலமாக அதிபர் இல்லாது ஒரு தேசியபாடசாலை இயங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது, எங்களது கல்லூரியே எமது உயிர் நாடி, உடனடியாக அதிபர் ஒருவரை நியமியுங்கள் போன்ற கோசங்களும் 

கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மேலும் இந்தப் போராட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், க.சிவநேசன் மற்றும் 

கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸ்வரன், க.விஜிந்தன், த.அமலன், இ.ஜெகதீசன் உள்ளிட்டவர்களும் கலந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு