யாழ்.விமான நிலையம் அமைவதை விரும்பாத விமானப்படை அதிகாாி..! அநாகாிகமாக நடத்தப்பட்டனரா இந்திய அதிகாாிகள்?

ஆசிரியர் - Editor I
யாழ்.விமான நிலையம் அமைவதை விரும்பாத விமானப்படை அதிகாாி..! அநாகாிகமாக நடத்தப்பட்டனரா இந்திய அதிகாாிகள்?

யாழ்ப்பாணம்- பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்தி மக்களுக்கான விமான சேவையினை தொடங்குவதை விமாப்படை தளபதி வரும்பாத நிலையில், இந்திய தொழிநுட்ப குழு அநாகாிகமாக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், கொழும்பு ரெலிகிராப் இணையத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையிலேயே அவர் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரையில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுவதற்குப் பதிலாக, 

அந்த திட்டம் இனவாத பொறாமைக்கு உள்ளானது. விமானப்படைத் தளபதி ஒத்துழைக்க தவறிவிட்டார். 2019 செப்ரெம்பர் 16ஆம் திகதி, வந்திருந்த இந்திய தொழில்நுட்ப குழுவினர் கடுமையான வேலைகளின் பின்னர், 

தேநீர் கேட்டனர். அதற்கு அவர், இந்தியர்கள் இதனை தமிழர்களுக்காக செய்கிறார்கள். நீங்கள் என்னிடம் தேநீர் பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து, சோர்ந்து போன இந்திய குழுவினர், பிற்பகல் 2 மணியளவில் தமக்குப் புத்துணர்ச்சியைப் பெறுவதற்காக ஜீப்பை காங்கேசன்துறைக்கு அனுப்பினர் என்று அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு