திருகோணமலை- மட்டக்களப்பு இடையில் பாாிய ரயில் விபத்து..! தெய்வாதீனமாக தப்பிய 250 பயணிகள்..

ஆசிரியர் - Editor I
திருகோணமலை- மட்டக்களப்பு இடையில் பாாிய ரயில் விபத்து..! தெய்வாதீனமாக தப்பிய 250 பயணிகள்..

கொழும்பிலிருந்து- திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு பயணித்த  Meenagaya Night Intercity express ரயில் Awukana - kalawewa பகுதியில் தடம்புரண்டதில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்ததுடன் சிலிப்பா் கட்டைகள் உடைந்து சேதமாகியுள்ளது. 

இந்த விபத்து நேற்று இரவு 11 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ரயில் இன்ஜின் அங்கிருந்த பாலத்தை கடந்து செல்ல முன்னர் 

விபத்து ஏற்பட்டதால் தெய்வாதீனமாக பயணிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது தவிர்க்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து சரிந்திருந்தால் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

ரயிலில் 250 பயணிகள் ரயிலில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு