வயோதிப பெண் குரூரமான சித்திரவதைகளின் பின்பே கழுத்தறுத்து கொல்லப்பட்டாா்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.

ஆசிரியர் - Editor I
வயோதிப பெண் குரூரமான சித்திரவதைகளின் பின்பே கழுத்தறுத்து கொல்லப்பட்டாா்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்.

யாழ்.கோண்டாவிலில் தனிமையில் வாழ்ந்த வயோதிப மாது குரூரமாக சித்திரவதை செய்யப்பட்டதன் பின்னா் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணை கள் மூலமாக தொியவந்திருக்கின்றது. 

குறித்த வயோதிப பெண்ணை இழுத்துவந்து ஆடைகளை களைந்ததுடன், வயிற்றில் நெருப்பினால் சுட்டு பின்னா் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக விசாரணை கள் மூலம் தொியவருவதுடன், குறித்த பெண் அணிந்திருந்த

சங்கிலி, காப்பு ஆகியன கொலைகாரனால் அபகாித்து செல்லப்பட்டுள்ளதாக பொலி ஸாா் கூறுகின்றனா். கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் 

கூரிய ஆயுதத்தினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான புண்ணியானந்தம் சந்திராதேவி (வயது-61) என்ற வயோதிபப் பெண்ணே 

வெட்டுக் காயங்களுடன் வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளதுடன் மற்றையவர் ஆசிரியர் என்றும் நீர்வேலியில் வசித்து வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கூரிய ஆயுதத்தையும் யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் மீட்டனர்.இக்கொலை சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் நீதிவான் அ.பீற்றர் போல், சட்ட மருத்துவ நிபுணர் உ.மயூரதன் ஆகியோர் நீதி விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனையடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக 

பெண்ணின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிவான், 

சட்ட மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு