இந்திய அமைதிப்படை காடையா்களின் வெறித்தனத்தால் படுகொலை செய்யப்பட்டவா்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..!

ஆசிரியர் - Editor I
இந்திய அமைதிப்படை காடையா்களின் வெறித்தனத்தால் படுகொலை செய்யப்பட்டவா்களின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..!

இந்திய அமைதிப்படையினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்திய சாலை ஊழியா்கள் மற்றும் அப்பாவிகளின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. 

காலை 9.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் ஈகை சுடரேற்றப்பட்டு, மலா் அஞ்சலிகள் செலுத்தப்பட்டு நினைவேந்தல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் எஸ்.சத்தியமூா்த்தி மற்றும் வைத்தியா்கள், தாதியா்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் கலந்து கொண்டனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு