முல்லைத்தீவு- இரணைப்பாலையில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள், புகைப்படங்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- இரணைப்பாலையில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள், புகைப்படங்கள் மீட்பு..!

முல்லைத்தீவு - இரணைப்பாலை பகுதியில் உள்ள குழந்தை யேசு ஆலயத்திற்கு சுற்றுமதில் கட்டுவதற்காக குழி தோண்டியபோது தமிழீழ விடுதலை புலிகளி சீருடைகள், அல்பங்கள், புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை அத்திபாரக் கிடங்கு வெட்டும் போது அதற்குள்ளிலிருந்து அவை தென்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் சேட்கள், அல்பங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை மீட்டு சென்றுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு