யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் டிப்பருடன் மோதி விபத்து..! ஒருவா் உயிாிழப்பு, 4 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் டிப்பருடன் மோதி விபத்து..! ஒருவா் உயிாிழப்பு, 4 போ் படுகாயம்..

கிளிநொச்சி- 156ம் கட்டையில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளது டன் 4போ படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

ரிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் வீதியின் ஓரத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்பட்டுள்ள வடிகான் ஆபத்தானதாக 

அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது. 

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியை சேர்ந்த கதிர்பிள்ளை இரத்தினம் என்பவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

படுகாயமடைந்தவர்களில் 30 வயது குடும்ப பெண்ணுடன் அவது ஒன்றரை வயது குழந்தையும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு